எழுதவேண்டும் என்ற எண்ணம் எழுதத்துவங்குமுன் வரும் சலனம் இவையிரண்டும் எழுதக்கிடைத்த பரிசாக பாவித்து எழுதத்துவங்கும்போது வரும் உறக்கத்தை என்னவென்பேன்
எதை எழுத என்னவென்று எழுத எண்ணும் எண்ணத்தையா எழுதும் எழுத்தையா இரண்டும் ஒன்றாக இருக்குமானால் நானும் ஒரு குட்டி கவிஞன் ஆயிருப்பேனோ
என் எழுத்தில் கவித்துவம் வேண்டாம் கட்டுகதைகளும் வேண்டாம் சிறு உரைநடை பயணம் போதும் இதில் பயணிக்கும் சிலரேனும் உரை சுற்றுலா சென்ற மனமகிழ் பெறவேண்டும் எழுத்துப்புலமை எனும் இறைவரம் தருவதும் இயற்கைதானோ
Sunday, October 08, 2006
எழுத்துச்சலனம்
By கில்ட்டன் at 8:18 AM
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இது என் முதல் முயற்சி.. என் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் இதுவரை நான்மட்டுமே வாக்காளர். வேட்பாளராகிய நான்மட்டுமே வாக்களித்துள்ள இந்த தொகுதியில் மறுவாக்குப்பதிவுதான் நிதர்சனமோ?
Post a Comment